உலகம்

சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 6 பாக். ராணுவ வீரர்கள் பலி

Published On 2025-12-09 23:42 IST   |   Update On 2025-12-09 23:42:00 IST
  • பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
  • தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேநேரம் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News