உலகம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி எதிரொலி: ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 தமிழர்கள் கைது

Published On 2022-06-12 12:00 GMT   |   Update On 2022-06-12 12:00 GMT
  • அப்பாறை ஓகந்த கடற்பரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்ட 5 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அதேபோல் மற்றொரு படகில் வந்த 15 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பற்றாக்குறையால் தவிக்கிறார்கள்.

ஆனால் இலங்கையில் இருந்து பலர் வெளியே செல்ல முயற்சித்து வருகிறார்கள். கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று வருகிறார்கள். அதே போல் தமிழகத்திலும் அகதிகளாக இலங்கை தமிழர்கள் வந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 ஈழத்தமிழர்களை கடற்படை கைது செய்துள்ளது.

அப்பாறை ஓகந்த கடற்பரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்ட 5 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் செல்பவர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்.

கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அதேபோல் மற்றொரு படகில் வந்த 15 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படகு வழியாக வருபவர்களை ஏற்க மாட்டோம் என்று ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய செல்லும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News