உலகம்

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலி

Published On 2022-08-06 09:39 GMT   |   Update On 2022-08-06 09:39 GMT
  • 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 3 இளைஞர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News