உலகம்

கப்பலில் இருந்து ஏவுகணைகள் வீசி வடகொரியா சோதனை

Published On 2024-02-14 04:51 GMT   |   Update On 2024-02-14 04:51 GMT
  • கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
  • எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்காவின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல் சோதனை நடத்துகிறது. சமீபத்தில் தென் கொரியாவுக்கு எதிராக போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரியா அதிபர் தெரிவித்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.

வடகொரியா தனது வடகிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து பல ஏவுகணைகளை வீசியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. மேலும் கிழக்கு கடற்கரை நகரமான பொன்சானின் வடகிழக்கு கடல்பகுதியில் கண்டறியப்பட்ட ஏவுகணைகளை தென்கொரியா, அமெரிக்க ராணுவங்கள் ஆய்வு செய்து வருவதாக தென் கொரியா கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்தனர். எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன. எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News