உலகம்

மெக்சிகோ அதிபருக்கு 3-வது முறையாக கொரோனா பாதிப்பு

Published On 2023-04-24 08:45 GMT   |   Update On 2023-04-24 08:45 GMT
  • மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப் ரடோ காய்ச்சலால் அவதிப்பட்டார்.
  • 3-வது தடவையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப் ரடோ காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதிபர் லோபஸ் ஒப் ரடோ ஏற்கனவே 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். தற்போது 3-வது தடவையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News