உலகம்

காபூலில் கல்வி மையம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

Published On 2022-10-01 13:31 IST   |   Update On 2022-10-01 13:31:00 IST
  • தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
  • இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

கல்வி இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News