உலகம்

ஸ்பெயினில் ரெயில் என்ஜின் மோதி 4 பேர் பலி

Published On 2023-09-11 10:16 GMT   |   Update On 2023-09-11 10:24 GMT
  • மாண்ட மெலோ பகுதியில் 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
  • படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பார்சிலோனியா:

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பிராந்தியத்தில் கட்டலோனியா பகுதியில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் நேற்று 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News