உலகம்

அதிபர் கோத்தபய ராஜபக்ச

இலங்கை அதிபர் வெளிநாட்டில் உள்ளார் என்பது உண்மை இல்லை - பாராளுமன்ற சபாநாயகர் தகவல்

Published On 2022-07-11 12:22 GMT   |   Update On 2022-07-11 12:35 GMT
  • இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.
  • பொதுமக்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு:

கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்கவேண்டும் என முடிவெடுத்தது. பிரதமர் பதவி ஏற்று 2 மாதம் முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் எனவும், புதன்கிழமைக்குள் அவர் இலங்கை திரும்பி விடுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் அதிபர் கோத்தபய இலங்கையில் தான் உள்ளார். வெளிநாட்டில் இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News