உலகம்

14 இந்திய மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

Published On 2022-11-16 21:30 IST   |   Update On 2022-11-16 21:31:00 IST
  • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.
  • எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு:

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.

இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 இந்திய மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News