உலகம்

குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு

Published On 2024-06-13 09:30 IST   |   Update On 2024-06-14 07:49:00 IST
2024-06-13 06:44 GMT

குவைத் தீவிபத்தில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024-06-13 06:09 GMT

குவைத்தில் தமிழர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று குவைத் அரசிடம், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024-06-13 05:41 GMT

குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் பலரது உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இதனால் இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

2024-06-13 05:29 GMT

குவைத் தீ விபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

2024-06-13 05:27 GMT

குவைத் தீவிபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிப்பு

2024-06-13 05:19 GMT

குவைத் தீவிபத்து: தமிழகத்தை சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

2024-06-13 05:09 GMT

குவைத் தீவிபத்து தொடர்பாக  முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

2024-06-13 05:07 GMT

கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் போர்மேன்-ஆக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிபை தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

2024-06-13 04:07 GMT

குவைத் தீவிபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:-

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

2024-06-13 04:07 GMT

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் தீவிபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தீவிபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News