உலகம்

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன், மார்க் ரூபியோ சந்திப்பு

Published On 2025-11-12 23:35 IST   |   Update On 2025-11-12 23:35:00 IST
  • ஜி7 நாட்டின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு கனடாவில் நடைபெற்றது.
  • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

ஒட்டாவா:

ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது.

இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்க் ரூபியோவை நேரில் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News