உலகம்

நியூ யார்க் நைட் கிளப்-இல் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு - 8 பேர் படுகாயம்

Published On 2025-08-17 21:13 IST   |   Update On 2025-08-17 21:16:00 IST
  • சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
  • மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

லவுஞ்சில் நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.

இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.   

Tags:    

Similar News