உலகம்

திபெத்தில் மிதமான நிலநடுக்கம்: 3.8 ரிக்டர் அளவில் பதிவு

Published On 2025-12-18 01:59 IST   |   Update On 2025-12-18 01:59:00 IST
  • திபெத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது
  • இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.

பீஜிங்:

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்குப் பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது.

இந்நிலையில், திபெத்தில் நேற்று இரவு 9.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News