உலகம்

நேபாளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

Published On 2025-06-29 17:50 IST   |   Update On 2025-06-29 17:50:00 IST
  • ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.
  • மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.

நேபாளத்தில் இன்று (ஜூன் 29) 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் மதியம் 2.19 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.  இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.

ஏனெனில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூமிக்கு மிக அருகில் உணரப்படுவதால், உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு பரவலான சேதம் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.

இதற்கு மாறாக, ஆழமான நிலநடுக்கங்களில் இருந்து வரும் அதிர்வுகள் மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.

Tags:    

Similar News