உலகம்

 சீன கப்பல் (கோப்பு படம்)

சீன ஆராய்ச்சி கப்பல் அடுத்த மாதம் இலங்கை வருகை- அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ராணுவம் தகவல்

Published On 2022-07-31 07:53 GMT   |   Update On 2022-07-31 08:05 GMT
  • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை சீன கப்பல் மேற் கொள்கிறது.
  • இலங்கைக்கு சீன கப்பல் வருகை குறித்து இந்தியா கண்காணிப்பு.

கொழும்பு:

இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் அடுத்த மாதம் சீன ஆராய்ச்சி கப்பல் யுவான் வாங்கை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளார். இதே சூழலில் சீனக் கப்பலுக்கு நாங்கள் அனுமதியும் வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ந் தேதி முதல் நிறுத்தப்படும் சீன ஆராய்ச்சி கப்பல் செப்டம்பர் வரை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன கப்பல் இலங்கை வருகை குறித்து கவனமுடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன ராணுவத்தின் தலையீட்டிற்கு இடமளிக்க கூடாது என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள், இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளன.

Tags:    

Similar News