உலகம்

சூடானில் நடந்த வான்வழித் தாக்குதல் - 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி

Published On 2023-06-17 21:42 GMT   |   Update On 2023-06-17 21:42 GMT
  • சூடானின் கார்டோமில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான் ராணுவத்திற்கும், பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த பொதுமக்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்களில் 5 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News