உலகம்

அமெரிக்காவில் தொடரும் சோகம் - துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி

Published On 2023-10-26 07:39 IST   |   Update On 2023-10-26 07:45:00 IST
  • அமெரிக்காவில் நேற்று நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
  • இதில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் உள்ள நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய இருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அந்நாட்டு மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது.

Tags:    

Similar News