உலகம்

தண்ணீரை தடுத்தால் கடும் விளைவு ஏற்படும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்

Published On 2025-08-13 14:41 IST   |   Update On 2025-08-13 14:41:00 IST
  • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
  • பாகிஸ்தான் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்றார்.

இஸ்லாமாபாத்:

சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:

எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் உங்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News