உலகம்

பிலிப்பைன்ஸில் நெரிசலான குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு

Published On 2023-04-10 01:20 GMT   |   Update On 2023-04-10 01:20 GMT
  • தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
  • ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால், ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

எனினும் தீ விபத்தில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தீ விபத்தால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றன.

Tags:    

Similar News