உலகம்
சவுதியில் இந்தியர்கள் பயணித்த பேருந்து தீப்பிடித்து விபத்து - 42 பேர் உயிரிழப்பு
- விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
- விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.