உலகம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி

Published On 2022-10-05 13:22 GMT   |   Update On 2022-10-05 13:22 GMT
  • அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது
  • சமீபத்தில் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்

காபூல்:

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை ஆளும் தலிபான் அமைப்பு உறுதி செய்தது. அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்காலம் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News