உலகம்
பில்கேட்ஸ்

டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி தடுப்பூசி: மத்திய அரசை பாராட்டிய பில்கேட்ஸ்

Published On 2022-05-03 03:09 GMT   |   Update On 2022-05-03 03:09 GMT
உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் கூறினார்.
வாஷிங்டன் :

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் கூறினார்.

அதில் உலகம் முழுவதிலும்  உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர்,

தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் இருக்கும் கிராமங்களையும், கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

மாஸ்க் பற்றிக் கூறிய பில் கேட்ஸ்,

"மாஸ்க் ஒரு மேஜிக் பொருள். அது அசாத்தியமானது. கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க தடுப்பூசிகள் மற்றும் மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருத்துகள் தாயரிக்கப்பட்டன. ஆனால் விலை மலிவான மாஸ்க் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க சிறப்பாக உதவியது என்றார்.
Tags:    

Similar News