செய்திகள்
ஜில் பைடன்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார் ஜில் பைடன்

Published On 2021-07-13 12:52 GMT   |   Update On 2021-07-13 12:52 GMT
அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், டோக்கியோ செல்கிறார் என்று அவரது அலுவலகம் அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல தயாராகி வருகின்றனர்.

ஜூலை 23-ந்தேதி தொடக்க விழா நடைபெறும். இந்த விழாவில் வீரர்- வீராங்கனைகள் தங்களுடைய நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் செல்வார்கள். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியியும், அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுபவருமான ஜில் பைடன், டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News