செய்திகள்
தீவிபத்து (கோப்புப்படம்)

ரஷியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து- 4 பேர் உடல் கருகி பலி

Published On 2020-04-10 05:15 GMT   |   Update On 2020-04-10 04:41 GMT
ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குன்ட்சோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கு ஆதரவற்ற முதியோர்கள் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதியோர் இல்லத்தில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கு தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் முதியோர் இல்லம் முழுவதும் பரவியது. இதனால் உள்ளே இருந்த அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 10 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News