செய்திகள்

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்

Published On 2019-04-23 13:59 GMT   |   Update On 2019-04-23 13:59 GMT
சவுதி அரேபியா நாட்டில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes
ரியாத்:

சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயல்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes #37executed #37terroristsexecuted 
Tags:    

Similar News