செய்திகள்

21 புதிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்

Published On 2018-09-20 05:56 GMT   |   Update On 2018-09-20 05:56 GMT
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது புதிதாக 21 பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார். #Malaysia #NajibRazak
கோலாலம்பூர்:

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது 7 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இன்று 21 புதிய பண மோசடி வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று காலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி நூர் ரஷித் இப்ராகீம் கூறுகையில், நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முறையற்ற முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவர் மீது 21 வழக்குகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  இன்று மதியத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Malaysia #NajibRazak
Tags:    

Similar News