செய்திகள்

மெக்சிகோவில் தொடரும் சோகம் - சுற்றுலா தலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

Published On 2018-09-16 04:23 IST   |   Update On 2018-09-16 04:23:00 IST
மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #MexicoFiring
மெக்சிகன் சிட்டி:

மெக்சிகோவில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர். அங்கு வார விடுமுறையை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் இசைக்கலைஞர்கள் போன்று வேடமணிந்திருந்தனர்.

அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MexicoFiring
Tags:    

Similar News