செய்திகள்

ஓயாமல் நகம் கடிக்கும் பழக்கத்தால் கட்டை விரலை இழந்த மாணவி

Published On 2018-09-06 12:42 GMT   |   Update On 2018-09-06 12:42 GMT
அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கத்தால் மிகவும் அரிதான கேன்சரால் பாதிக்கப்பட்டு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வலதுகை கட்டை விரலை இழந்துள்ளார்.
லண்டன்:

பிரிட்டனின் கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் விதோர்ன். 20  வயதான கல்லூரி மாணவியான இவருக்கு அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஓயாமல் நகம் கடித்ததன் காரணமாக வலது கையில் உள்ள கட்டை விரல் நான்காண்டுகளுக்கு முன் கறுப்பாக மாற தொடங்கியது. கையுறகள் கொண்டு மூடி மறைத்து வந்த அவர், வலி தாங்க முடியாமல் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர் தான் acral lentiginous subungual melanoma என்ற அரிய வகை கேன்சரால் விதோர்ன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. எனினும், கேன்சரை முழுமையாக அகற்ற முடியவில்லை. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் விதோர்ன், விரலை இழந்தாலும் உடல்நலம் தேறி வருகிறார்.
Tags:    

Similar News