செய்திகள்

ஆப்கானிஸ்தான் - மல்யுத்தம் மையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலி

Published On 2018-09-05 16:01 GMT   |   Update On 2018-09-05 16:01 GMT
ஆப்கானிஸ்தானின் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #KabulSuicideAttack
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இந்நிலையில்,  தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabulSuicideAttack
Tags:    

Similar News