செய்திகள்
மரணம் அமைதியானது - இறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும் பெண்ணின் அனுபவம்
மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் உயிரிழந்த ஒரு பெண், ‘நான் இறந்தபோது எப்படி உணர்ந்தேன்’ என்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
லண்டன்:
ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும், அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மிச்சைலி, கட்டிலில் படுத்தபடியே, சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும், அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், மரணம் மிகவும் அமைதியானது, அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும், அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மிச்சைலி, கட்டிலில் படுத்தபடியே, சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும், அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், மரணம் மிகவும் அமைதியானது, அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.