செய்திகள்

அமெரிக்காவில் மனைவி, 2 குழந்தைகளை கொன்ற வாலிபர்

Published On 2018-08-18 05:52 GMT   |   Update On 2018-08-18 05:52 GMT
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசியது தெரிய வந்தது.
நியூயார்க்:

அமெரிக்காவில் கொலோரடோவை சேர்ந்தவர் கிறிஸ்வாட்ஸ். இவரது மனைவி ‌ஷனான் வார்ஸ். இவர்களுக்கு பெல்லா, செலஸ்ட் ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில் ‌ஷனான் வார்ஸ் மற்றும் அவரது 2 குழந்தைகள் கிறிஸ்வாட்ஸ் பணிபுரியும் பெட்ரோலியம் கம்பெனியில் பெட்ரோல் தொட்டிகளில் பிணமாக மீட்கப்பட்டனர்.அவர்களை கிறிஸ்வாட்ஸ் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் கிறிஸ் வாட்ஸ் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றது தெரிய வந்தது. #tamilnews
Tags:    

Similar News