செய்திகள்

இலங்கை சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் ஜோடியின் பாஸ்போர்ட் பறிமுதல்

Published On 2018-07-30 15:59 GMT   |   Update On 2018-08-01 11:41 GMT
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நாயை தடுத்த சுங்க அதிகரிகளை தாக்கிய வழக்கில் குவைத் நாட்டை சேர்ந்த ஜோடியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை கோர்ட் தடை விதித்துள்ளது.
கொழும்பு:

குவைத்தை சேர்ந்த ஜோடி தங்களது நாயுடன் கொழும்பு வந்து இறங்கியுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறும் போது சுங்க அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் 5 அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை ஜாமினில் விடுவித்த மாவட்ட கோர்ட், இருவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து உத்தரவிட்டது. இருவரும் தனித்தனியாக தங்கள் மீதான விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். 
Tags:    

Similar News