செய்திகள்
வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பின் ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் பலி
வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பள்ளி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா :
வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோகோரியா நகரில் ஒரே பள்ளியை சேர்ந்த 22 மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து கால்பந்து விளையாடினர். போட்டி முடிந்த பிறகு அவர்களில் 6 பேர் அருகே உள்ள மதமுகுரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அதில், 5 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி தலைமை போலீஸ் அதிகாரி பக்ருதின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 5 மாணவர்களின் இறுதிசடங்கில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்பவர்களை நெகிழ்சிக்குள்ளாகியது.
வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோகோரியா நகரில் ஒரே பள்ளியை சேர்ந்த 22 மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து கால்பந்து விளையாடினர். போட்டி முடிந்த பிறகு அவர்களில் 6 பேர் அருகே உள்ள மதமுகுரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அதில், 5 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி தலைமை போலீஸ் அதிகாரி பக்ருதின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 5 மாணவர்களின் இறுதிசடங்கில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்பவர்களை நெகிழ்சிக்குள்ளாகியது.