செய்திகள்

பக்ரைனில் புதிய இந்திய தூதரக கட்டிடம் - திறப்பு விழாவுக்கு வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்

Published On 2018-07-14 14:25 GMT   |   Update On 2018-07-14 14:25 GMT
2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மனாமா விமானநிலையத்தில் பக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார். #SushmaSwaraj #Bahrain
மனாமா:

2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பக்ரைன் வந்தடைந்தார். இந்த பயணத்தில் பக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபாவுடனான உயர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.



மேலும், பல்வேறு உயரதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இருநாட்டு உறவுகள் குறித்தும், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திறந்துவைக்க உள்ளார்.#SushmaSwaraj #Bahrain
Tags:    

Similar News