செய்திகள்

கனடா - சுட்டெரிக்கும் வெயிலுக்கு 6 பேர் பலி

Published On 2018-07-04 01:05 GMT   |   Update On 2018-07-04 01:05 GMT
கனடாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாண்ட்ரியல் நகரில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatWave
டொரண்டோ:

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம். மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #HeatWave
Tags:    

Similar News