செய்திகள்

ஐவரி கோஸ்ட் - அபித்ஜானில் மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி

Published On 2018-06-19 20:28 GMT   |   Update On 2018-06-19 20:28 GMT
ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் பலத்த மழைக்கு 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
அபித்ஜான்:  

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டில் உள்ள அபித்ஜான் நகரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழைக்கு 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களது வீட்டை இழந்து தத்தளித்து வருகின்றனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அரசின் நிவாரண முகாம்க்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளதாக அரசு இணைய தளங்களில் பதிவிட்டுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
Tags:    

Similar News