செய்திகள்

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நியமனம்

Published On 2018-05-28 08:31 GMT   |   Update On 2018-05-28 08:31 GMT
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.#PakistaninterimPM
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷனின் இடைக்கால தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.#PakistaninterimPM 
Tags:    

Similar News