செய்திகள்

சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கியர் ஸ்போர்ட் அறிமுகம்

Published On 2017-08-31 10:10 IST   |   Update On 2017-08-31 10:10:00 IST
சாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ராணுவ தரத்திலான உறுதித் தன்மை கொண்ட கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
சீயோல்:

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.2 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஜிபிஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் இதயத்துடிப்பு சென்சார் மற்றும் சாம்சங் பே வசதியை வழங்கும் NFC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

20 மில்லிமீட்டர் அளவு கொண்ட ஸ்டிராப்களை எளிமையாக மாற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 5ATM சான்று கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் பெற்றுள்ளது. இதனால் 50 மீட்டர் அளவு தண்ணீரில் பயன்படுத்த முடியும். ஸ்பீடோ எனும் நீச்சல் பயிற்சி செயலியும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



சாம்சங் கியர் ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்:

- 1.2 இன்ச் 360x360 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே
- 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
- 768 எம்.பி. ரேம் 
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டைசன் இயங்குதளம்
- 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- வைபை, ப்ளூடூத், NFC
- அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், இதய துடிப்பு சென்சார்
- 300 எம்ஏஎச் பேட்டரி
- வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங் கியர் ஸ்போர்ட் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைப்பதோடு, 349.99 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரயிருக்கும் கியர் ஸ்போர்ட் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Similar News