சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் இளைஞர் தற்கொலை
- சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரஜித் சிங் (33 வயது என்ற இளைஞர், ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று மாலை, அமைந்தகரையில் உள்ள பிரபல மால் (வணிக வளாகம்) சென்றுள்ளார். அங்கு, 3-வது மாடியில் உள்ள கடைக்கு சென்று அவர் பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென இந்திரஜித் சிங், தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு, ஓடிச்சென்று மாலின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திரஜித் சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.