கிரிக்கெட் (Cricket)
null

மகளிர் உலகக் கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயம்

Published On 2025-10-09 19:56 IST   |   Update On 2025-10-09 19:56:00 IST
  • இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
  • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இன்று 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டுள்ளது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 252 ரன்களை வெற்றி இல்லாக்க இந்தியா நிர்ணயித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து, இந்திய அணி தரப்பில் பிரதீகா ராவல் 37, சினேகா ரானா 33 மற்றும் ஸ்மிருதி மந்தனா 23 ரன்களும் எடுத்தன.

Tags:    

Similar News