10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துகள் - விஜய் வசந்த்
- அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை.
- வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துகள்.
வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.