தமிழ்நாடு செய்திகள்

இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: ராமனும், ராமதாசும் வேறு வேறல்ல - வன்னி அரசு சர்ச்சை பேச்சு

Published On 2025-08-25 08:34 IST   |   Update On 2025-08-25 08:34:00 IST
  • ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது.
  • அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும்.

மயிலாப்பூர்:

சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கருத்தரங்கில் வன்னி அரசு பேசியதாவது:-

தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன்.

ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்கள்... இந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. இந்து மதத்தில் எப்போதுமே சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதத்திற்கு எதிராக மதம் மாறுகிறார்.

ராமன் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுக்காக இந்த படுகொலை செய்கிறார். ராமதாஸ் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுடைய இந்த கருத்தியலுக்காக படுகொலை செய்கிறார். படுகொலை செய்ய தூண்டுகிறார். இரண்டும் ஒன்று தான். ராமனும் ஒன்று தான்.. ராமதாசும் ஒன்றுதான். ராமதாசுடன் இதை நான் முடிக்கவில்லை.

இதன் தொடர்ச்சி இன்றைக்கு நிறைய இருப்பதால் இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார். 

Tags:    

Similar News