தமிழ்நாடு செய்திகள்

வள்ளுவர் மறை... திருக்குறளுக்கு உரை எழுதிய வைரமுத்து நூலுக்கான தலைப்பை அறிவித்தார்

Published On 2025-05-22 11:32 IST   |   Update On 2025-05-22 11:32:00 IST
  • திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
  • கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

திருக்குறள் 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் இருக்கின்றன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.

கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். தற்போது அவர், தனக்கே உரித்தான கவித்துவ நடையில் விளக்க உரை எழுதி இருக்கிறார். முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று கவிஞர் வைரமுத்து அறிவித்து உள்ளார்.

'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News