தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் ஆலமரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-12 14:05 IST   |   Update On 2025-05-12 14:05:00 IST
  • கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி பெண் தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆலமரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் ஆலமரக்கிளை முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.

ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி, வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News