தமிழ்நாடு செய்திகள்

லாக்அப் மரணங்கள்- குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?

Published On 2025-07-10 09:57 IST   |   Update On 2025-07-10 11:21:00 IST
  • 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
  • விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மடப்புரம் அஜித்குமார் கொலையை கண்டித்து வருகிற ஞாயிற்றுக்கிழமை த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக காவல்நிலையங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

மேலும், காவல் நிலையங்களில் மரணம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News