தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ். நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை- டி.டி.வி. தினகரன்

Published On 2025-09-17 12:08 IST   |   Update On 2025-09-17 12:08:00 IST
  • இ.பி.எஸ். பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
  • முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை.

சென்னையில் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என வீரவசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார் இ.பி.எஸ்.

* தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது.

* இ.பி.எஸ். அடிக்கும் கூத்துக்களை எல்லாம் ராஜதந்திரம் என கூறி கொண்டிருந்தனர்.

* இ.பி.எஸ். பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

* அ.தி.மு.க. தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்.

* இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுகிறார் இ.பி.எஸ்.

* முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை.

* தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இ.பி.எஸ்.

* இ.பி.எஸ். நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News