தமிழ்நாடு செய்திகள்
முத்துராமலிங்க தேவர் பெயர்- இ.பி.எஸ். பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
- எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
- சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
எல்லா சமுதாக மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.