தமிழ்நாடு செய்திகள்
திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் ஆக.31-ந்தேதி வரை நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே
- திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
- மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் கச்சேகுடா செல்லும் ரெயில் ஆக.18 முதல் ஆக.20-ந் தேதி வரை பண்ருட்டியில் நின்று செல்லும்.
தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சேகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரெயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ந் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.