சென்னையில் நாளை (07.10.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பல்லாவரம்: துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
திருமுல்லைவாயல்: சிடிஎச் சாலை, சோளம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், கலைஞர் நகர்.
மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களான பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, லாயிட்ஸ் லேன்.
பூந்தமல்லி: பை-பாஸ் சாலை மற்றும் பரிவாக்கம் சாலை
ஆவடி: பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.