தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் (25.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-08-23 15:09 IST   |   Update On 2025-08-23 15:09:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
  • ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பெருங்களத்தூர்: பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை ரோடு மற்றும் சடகோபன் நகர்.

முடிச்சூர்: ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து வாரியம் சாலை, சக்ரா அவென்யூ.

தாம்பரம்: திருவேங்கடம் நகர், மேலாண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ண திலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர்.

போரூர்: லட்சுமி அவென்யூ, முகலிவாக்கம் மெயின் ரோடு, ராமசந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர்.

Tags:    

Similar News